sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி - கடலுார் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி - கடலுார் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி - கடலுார் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்


ADDED : ஏப் 09, 2025 07:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 07:33 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பாகூர் : புதுச்சேரி - கடலுார் சாலையில் நாளை (10ம் தேதி) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவின் குமார் திரிபாதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் சிவசுப்புரமணிய சுவாமி கோவில் செடல் உற்சவத் திருவிழா நாளை (10ம் தேதி) நடக்கிறது.

இதனால், புதுச்சேரி -கடலுார் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், நான்கு சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து நாளை (10ம் தேதி) காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாற்றுப் பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது.

அதன்படி, புதுச்சேரியிலிருந்து கடலுார் செல்லும் நான்கு சக்கர மற்றும் கனரக வாகனங்கள் தவளக்குப்பம், அபிஷேகப்பாக்கம், புதிய பைபாஸ் சாலை , கன்னியகோவில் முள்ளோடை வழியே கடலுார் செல்ல வேண்டும்.

அதேபோல், கடலுாரில் இருந்து புதுச்சேரி செல்லும் வாகனங்கள் கன்னியகோவில் அருகே புதிய பைபாஸ் சாலை , அபிஷேகப்பாக்கம், தவளக்குப்பம் சாலை வழியாக செல்ல வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us