ADDED : ஜூலை 29, 2025 09:41 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி; கொடாத்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்டம், அரசு மார்பு நோய் நிலையம் சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் ரூபஸ் தலைமை தாங்கினார். ஆசிரியை வள்ளி வரவேற்றார். அரசு மார்பு நோய் நிலைய சூரியகுமார், மணிமாறன் ஆகியோர் புகையிலை மற்றும் போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். தொடர்ந்து, மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. உடற்கல்வி ஆசிரியர் அருள்பிரசாத் நன்றி கூறினார்.
