ADDED : நவ 16, 2024 02:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு இஸ்திரி பெட்டி மற்றும் தள்ளுவண்டி வழங்கும் விழா மதகடிப்பட்டு எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.
அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு இஸ்திரிப் பெட்டி மற்றும் தள்ளுவண்டிகளை வழங்கினார். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை துணை இயக்குனர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து சன்னியாசிகுப்பம், கொத்தபுரிநத்தம், சோரப்பட்டு, விநாயகம்பட்டு, வம்புப்பட்டு, செல்லிப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் 10 கிலோ இலவச அரிசி மற்றும் 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கும் பணியை எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.

