ADDED : ஜன 18, 2025 05:49 AM
அ நிறம் | அளவு
காரைக்கால் : காரைக்கால் நெடுங்காடு மேலகாசாகுடி வண்ணான்குளம் தெருவை சேர்ந்தவர் கஸ்பர், 55; கூலி தொழிலாளி. இவரது மனைவி தவமணி. இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று முன்தினம் கஸ்பர், தவமணியிடம் சாப்பாடு கேட்டார்.
இதற்கு அவர், சாப்பாடு செய்யவில்லை என, கூறினார். இதனால் வேதனை அடைந்த கஸ்பர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
