ADDED : ஆக 25, 2025 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்:
தவளக்குப்பம் ஆனந்தா நகரைச் சேர்ந்தவர் ரகு,53; செக்யூரிட்டி வேலை செய்து வந்தார். மஞ்சள்காமாலை பாதித்ததில் கல்லீரல் பாதிக்கப்பட்டது. இதற்காக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மது குடித்த சற்று நேரத்தில் வாந்தி எடுத்தார். உடன் அவரை, அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.