sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாதுகாப்பான இணைய நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாதுகாப்பான இணைய நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

பாதுகாப்பான இணைய நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : பிப் 14, 2025 04:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2025 04:43 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் பாதுகாப்பான இணைய நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மாநில தகவலியல் அதிகாரி கோபி சுவாமிநாதன் வரவேற்றார்.தகவல் தொழில்நுட்ப செயலாளர் முத்தம்மா தலைமை தாங்கி, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இந்திரா காந்தி மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் உதயசங்கர், சைபர் கிரைம் போலீஸ் எஸ்.பி., பாஸ்கரன், தேசிய தகவலியல் மையத்தின் இயக்குநர் ராஜசேகரன் ஆகியோர் இணைய பாதுகாப்பின் முக்கியத்துவம், அதன் நடைமுறைகள் மற்றும் தற்போதைய சவால்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

இதேபோல், புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பான இணைய வழி மாவட்டங்களில், பாதுகாப்பான இணைய நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிகளில், அரசு அலுவலகங்களில் இணைய சேவைகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது, குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு ஆன்லைன் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இணையத்தில் தற்போதைய சவால்கள் மற்றும் புதிய பிரச்னைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us