ADDED : ஏப் 03, 2025 03:59 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டியை நேரு எம்.எல்.ஏ., வழங்கினார்.
புதுச்சேரி அரசு சமூகநலத்துறை மூலம் உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டி வழங்கும் விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு, தொகுதி எம்.எல்.ஏ., நேரு தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு ஸ்கூட்டி வழங்கினார். நிகழ்ச்சியில் சமூக நலத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


