sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

துணை தாசில்தார் தேர்வு பணியில் ஊதிய முரண்பாடு: ஊழியர்கள் புலம்பல்

/

துணை தாசில்தார் தேர்வு பணியில் ஊதிய முரண்பாடு: ஊழியர்கள் புலம்பல்

துணை தாசில்தார் தேர்வு பணியில் ஊதிய முரண்பாடு: ஊழியர்கள் புலம்பல்

துணை தாசில்தார் தேர்வு பணியில் ஊதிய முரண்பாடு: ஊழியர்கள் புலம்பல்


ADDED : செப் 02, 2025 03:21 AM

Google News

ADDED : செப் 02, 2025 03:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:அரசு சார்பில் நேற்று நடந்த துணை தாசில்தார் பணிக்கான தேர்வு பணியில் ஈடுபட்டவர்களுக்கு முரண்பாடாக ஊதியம் வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வருவாய் துறையில் காலியாக உள்ள 30 துணை தாசில்தார் பணியிடங்கள் எழுத்து தேர்வு அடிப்படையில் நிரப்ப பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இப்பணிக்கு மொத்தம் 37,349 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

இவர்களுக்கான தேர்வு நேற்று முன்தினம் 101 மையங்களில் நடந்தது. இத்தேர்வில் 24,62௦ பேர் பங்கேற்றனர். இத்தேர்வு பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், யூ.டி.சி., எல்.டி.சி., மற்றும் பல்நோக்கு ஊழியர்கள் என 3,500க்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபட்டனர்.

தேர்வு முடிந்ததும், தேர்வு பணியில் ஈடுபட்டவர்களுக்கு, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பில் சம்பளம் வழங்கப்பட்டது. அதில், 'சி' பிரிவு ஊழியர்களான யூ.டி.சி., மற்றும் எல்.டி.சி., களுக்கு ரூ.600ம், 'டி' பிரிவான பல்நோக்கு ஊழியர்களுக்கு ரூ.1,200 வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய முரண்பாடு ஊழியர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் குமுறல்

தேர்வு பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சம்பளம் வழங்கியது. ஆனால், அதே தேர்வு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு மட்டும் ஊதியம் வழங்கவில்லை. கடந்த காலங்களில் தேர்வு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு ரூ.600 சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது சம்பளம் வழங்காததால், போலீசார் புலம்பிக் கொண்டுள்ளனர்.








      Dinamalar
      Follow us