நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி,: புதுச்சேரி ரயில்வே ஸ்டேஷன் அருகே வாணரப்பேட்டையில் ரயில்வே சுகாதார மையம் உள்ளது. இங்கு இருந்த பிரிண்டரை மர்ம நபர் திருடிச்சென்று விட்டார். இதன் மதிப்பு ரூ.8 ஆயிரமாகும்.
இது குறித்து தலைமை சுகாதார ஆய்வாளர் கைலாஷ் சந்த் மீனா 42, ஒதியஞ்சாலை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கொண்டு விசாரித்து வருகின்றனர்.

