ADDED : அக் 26, 2025 11:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதிய பஸ் நிலையத்தில், அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதிய பஸ் நிலையத்தில் , கடந்த 22ம் தேதி, அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கதக்க முதியவர், இறந்து கிடந்தார். அவர், யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை.
இதுகுறித்து, உருளையன் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

