ADDED : பிப் 09, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில், வங்கித்துறையில் வேலை வாய்ப்பு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் ராஜிசுகுமார் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக கத்தார் நாட்டில் இருந்து மத்திய வங்கியில் ஆய்வாளராக பணிபுரியும் முகமது சர்பராச், வங்கி துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றியும், வங்கியின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பான முறையில் கையாளுவது குறித்தும் விளக்கம் அளித்தார்.
கருத்தரங்கில், வணிகவியல் துறை தலைவர் சிவக்குமார் உட்பட பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

