/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மக்கள் மன்றம் நிகழ்ச்சி அதிகாரிகள் குறைகேட்பு
/
மக்கள் மன்றம் நிகழ்ச்சி அதிகாரிகள் குறைகேட்பு
ADDED : செப் 07, 2025 06:46 AM

புதுச்சேரி : முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில், சீனியர் எஸ்.பி., கலைவாணன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் மக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, உடனடியாக அதனை நிவர்த்தி செய்யும் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதேபோல், நெட்டப்பாக்கத்தில் மேற்கு எஸ்.பி.,சுப்ரமணியன், தன்வந்தரி நகரில் வடக்கு எஸ்.பி., ரகுநாயகம், பாகூரில் தெற்கு எஸ்.பி., செல்வம், போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., ரச்சனா சிங் ஆகியோர் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்தனர்.
இதில், பொது மக்களிடம் இருந்து 54 புகார்கள் பெறப்பட்டு, 36 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. நிலுவையில் உள்ள புகார்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்க, நிலைய அதிகாரிகளுக்கு, எஸ்.பி.,க் கள் உத்தரவிட்டனர்.