/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது
/
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது
ADDED : ஏப் 06, 2025 08:02 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூலித் தொழிலாளியிடம் 4 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கெடார் அடுத்த அரியலுார் திருக்கையைச் சேர்ந்தவர் சுரேஷ், 36: கார் டிரைவர். அதே ஊரைச் சேர்ந்தவர் விசு, 30; கூலித்தொழிலாளி. இருவரும் நண்பர்கள்.
விசுவிடம் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, 'நான் ஆவின் நிறுவனத்தில் அதிகாரிளுக்கு டிரைவராக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அதிகாரிகளை தெரியும். ஆவினில் வேலை வாங்கித் தருகிறேன் என, சுரேஷ் கூறி, 4 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். பணம் பெற்ற பிறகு பலமுறை வேலை கேட்டும் வேலை வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இது பற்றி, கெடார் போலீசில் விசு அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து சுரேைஷ கைது செய்தனர்.

