UPDATED : ஏப் 29, 2026 10:33 PM
ADDED : ஏப் 29, 2026 08:22 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:ஜிப்மர் மருத்துவமனையின் புற நோயாளி பிரிவுகள் மே 1 ஆம் தேதி இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிப்மர் நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மே 1 புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, மத்திய அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதனையொட்டி, மே 1 ஜிப்மரில் புற நோயாளிகள் பிரிவுகள் இயங்காது. எனவே, அன்று நோயாளிகள் வருவதை தவிர்க்கவும். இருப்பினும், அவசரப்பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
