/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பட்டமளிப்பு விழாவில் பாரம்பரிய ஆடை அணியாவிட்டால் அனுமதியில்லை ஜிப்மர் நிர்வாகம் உத்தரவு
/
பட்டமளிப்பு விழாவில் பாரம்பரிய ஆடை அணியாவிட்டால் அனுமதியில்லை ஜிப்மர் நிர்வாகம் உத்தரவு
பட்டமளிப்பு விழாவில் பாரம்பரிய ஆடை அணியாவிட்டால் அனுமதியில்லை ஜிப்மர் நிர்வாகம் உத்தரவு
பட்டமளிப்பு விழாவில் பாரம்பரிய ஆடை அணியாவிட்டால் அனுமதியில்லை ஜிப்மர் நிர்வாகம் உத்தரவு
ADDED : ஜூலை 24, 2025 03:40 AM
புதுச்சேரி: பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவோருக்கு ஆடை கட்டுப்பாட்டை விதித்து ஜிப்மர் நிர்வாகம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவோர் கருப்பு அங்கியை அணிவது வழக்கம். ஆனால், சமீபத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், பட்டமளிப்பு விழாக்களில் இந்திய பாரம்பரிய உடைகளை அணியுமாறு அறிவுறுத்தியது. மாணவர்கள் தங்கள் மாநிலத்தின் கலாசாரத்துக்கு ஏற்ப உடைகளை வடிவமைத்துக் கொள்ளலாம் என, கூறப்பட்டது.
ஆனால், ஜிப்மர் நிர்வாகம் பட்டம் பெறுவோருக்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. புதுச்சேரியில் இயங்கி வரும் மத்திய அரசின் நிறுவனமான ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட மருத்துவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பட்டமளிப்பு விழா ஆடையில் கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்டம் பெறும் மாணவர்கள் இந்திய பாரம்பரிய உடையில் தான் வரவேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய உடை அணியாதவர்கள் பட்டமளிப்பு விழாவில் அனுமதிக்க மாட்டார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஆண்களுக்கு வெள்ளை நிற முழுக்கை சட்டையுடன் பைஜாமா அல்லது வெள்ளை நிற வேட்டி அணிந்து கறுப்பு அல்லது மெரூன் ஷூ அணிந்து வர வேண்டும்.பெண்கள் தங்க நிற பார்டருடன் கூடிய வெள்ளை நிற சேலையுடன் தங்க நிற ஜாக்கெட் அணிய வேண்டும் அல்லது தங்க நிற பார்டர் உடன் வெள்ளை நிற முழுக்கை சுடிதார் அல்லது சல்வார் காமீஸ் அணியலாம். சத்தம் எழுப்பாத சாண்டல்சை காலணியாக அணிந்து வர வேண்டும் என, அறிவுறுத்தியுள்ளது.