ADDED : செப் 29, 2025 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: இந்திய இளைஞர்கள் பாரம்பரிய சிலம்ப சங்கத்தின் சார்பில் சர்வதேச சிலம்பம் போட்டி உப்பளம் ராஜிவ்காந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடை பெற்றது.
விழாவில் சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் புதுச்சேரி, தமிழகம் உள்பட 5 மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

