/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மின் கட்டண பாக்கியை செலுத்த அறிவுறுத்தல்
/
மின் கட்டண பாக்கியை செலுத்த அறிவுறுத்தல்
ADDED : மார் 09, 2024 02:52 AM
புதுச்சேரி: புதுச்சேரியில், மின் நுகர்வோர்கள் கட்டண பாக்கியை, இறுதி தேதிக்குள் செலுத்த, மின்துறை அறிவுறுத்தி உள்ளது.
மின்துறை செய்திக்குறிப்பு:
மின்துறை கிராமம் வடக்கு கோட்டத்திற்கு கீழ் இயங்கும் வில்லியனுார், பூமியான் பேட்டை, லாஸ்பேட்டை, கோரிமேடு, அசோக் நகர், முத்திரையர்பாளையம், காலாப்பட்டு, ராமநாதபுரம், சேதராப்பட்டு, திருக்கனுார், காட்டேரிகுப்பம் ஆகிய இயக்குதலும் மற்றும் பராமரித்தலும் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள், தங்களுடைய மின் கட்டண பாக்கியை, பட்டியலில் உள்ள இறுதி தேதிக்குள் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மின் இணைப்பு துண்டித்தால், நிலுவைத்தொகை முழுவதையும் செலுத்திய பிறகே மறு மின் இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

