ADDED : மார் 09, 2024 02:58 AM
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சியில், வரி வசூல் சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் செய்திக்குறிப்பு:
உழவர்கரை நகராட்சியானது வீட்டு வரி, சொத்து வரி, சேவை வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்துவோரின் நலன் கருதி, காலாப்பட்டு, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சுனாமி குடியிருப்பில் உள்ள அங்கன்வாடி மையத்தில் வரி வசூல் சிறப்பு முகாம், நாளை காலை 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்க உள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி, கணபதி செட்டிகுளம், பெரிய காலாப்பட்டு, சின்ன காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி, சுனாமி குடியிருப்பு மற்றும் இதர வார்டுகளில் உள்ள சொத்து வரி, சேவை வரி மற்றும் குடிநீர் கட்டண நிலுவைதாரர்கள், 2023-24ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு வரியை செலுத்தி, வட்டி மற்றும் ஜப்தி நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும் வீட்டு வரி, சொத்து வரி மற்றும் சேவை வரி செலுத்துவோர் ஆன்லைன் மூலம், lgrams.py.gov.in, என்ற முகவரியிலும் மற்றும் டெபிட், கிரெடிட் கார்டு மூலமாகவும் செலுத்தலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

