sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நரிக்குறவர்களுக்கு அடையாள அட்டை

நரிக்குறவர்களுக்கு அடையாள அட்டை

நரிக்குறவர்களுக்கு அடையாள அட்டை


ADDED : ஏப் 19, 2025 06:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2025 06:48 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி; தேசிய அளவிலான கைவினை கண்காட்சியில் பங்கேற்கும் நரிக்குறவ மக்களுக்கு அடையாள அட்டையை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முன்னாள் திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தி வழங்கினார்.

நரிகுறவ சமுதாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேசிய அளவில் நடக்கும் கைவினை கண்காட்சியில் பங்கேற்க இந்திய கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி ஏற்றுமதிக் கழகத்தின் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மதகடிப்பட்டு நரிக்குறவர்கள் குடியிருப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாற்றுத்திறனாளிகள் அமைப்புகளின் பேரவை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முன்னாள் திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தி கலந்து கொண்டு 30க்கும் மேற்பட்ட நரிக்குறவ சமுதாய மக்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

நரிக்குறவர்கள் சமுதாய மக்களின் தலைவர் தேசிங்கு வரவேற்றார். அப்போது, நரிகுறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதில், வாஞ்சிலிங்கம், முருகன், பாலகுமார், விவேக், காசிநாதன், திருநாவுக்கரசு, மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us