நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு 18 கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடந்தது.
திருக்கனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு ஆணையர் எழில்ராஜன் தலைமை தாங்கினார்.
இதில், பங்கேற்ற பொது மக்கள் கிராமத்தின் உட்புற சாலைகளை சீரமைக்க வேண்டும். மின்சாரம், குடிநீர் பற்றாக்குறை போக்க வேண்டும் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

