sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மாணவர்களுக்கு கவர்னர் வாழ்த்து 

/

மாணவர்களுக்கு கவர்னர் வாழ்த்து 

மாணவர்களுக்கு கவர்னர் வாழ்த்து 

மாணவர்களுக்கு கவர்னர் வாழ்த்து 


ADDED : மே 09, 2025 03:27 AM

Google News

ADDED : மே 09, 2025 03:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கவர்னர் கைலாஷ்நாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு;

தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ், 2025 ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் தேர்ச்சி பெற்றுள்ள புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பாக, அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ள மாணவ, மாணவிகளை மனதார பாராட்டுகிறேன். இது உங்கள் உழைப்புக்கும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி. புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 101 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி விகிதமும், மொத்தம் 582 மாணவ, மாணவிகள் பல்வேறு பாடங்களில் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. மொத்தம் 98.53 சதவீதம் என்ற சிறப்பான மாணவர் தேர்ச்சி விகிதத்தை அளித்து புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ள பள்ளிகளுக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us