/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வனவிலங்குகள், பறவைகள் கொன்று குவிப்பு எப்.ஐ.ஆர்., போடாமல் வனத்துறை மழுப்பல்
/
வனவிலங்குகள், பறவைகள் கொன்று குவிப்பு எப்.ஐ.ஆர்., போடாமல் வனத்துறை மழுப்பல்
வனவிலங்குகள், பறவைகள் கொன்று குவிப்பு எப்.ஐ.ஆர்., போடாமல் வனத்துறை மழுப்பல்
வனவிலங்குகள், பறவைகள் கொன்று குவிப்பு எப்.ஐ.ஆர்., போடாமல் வனத்துறை மழுப்பல்
ADDED : மார் 14, 2024 06:36 AM
புதுச்சேர : ஊசுட்டேரியில் வனவிலங்குகள், பறவைகள் கொன்று குவித்த சம்பவத்தில் வனத்துறை எப்.ஐ.ஆர்., கூட போடாமல் மவுனம் காத்து வருகின்றது.
புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ., தொலைவில் ஊசுட்டேரி அமைந்துள்ளது. தமிழகம், புதுச்சேரி என இரு மாநிலங்களால் பறவை சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஏரியில் கடந்த 10ம் தேதி வனவிலங்குகள், பறவைகள் கும்பல் கும்பலாக கொன்று குவிக்கப்பட்டு சிதறி கிடந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வழக்கமாக, ஒரு சில கொக்குகள் பறிமுதல் செய்தால் கூட வழக்கு பதிவு செய்து போஸ் கொடுக்கும் புதுச்சேரி வனத்துறை இவ்விஷயத்தில் இதுவரை வழக்கு பதிவு செய்யாமல் மவுனமாக உள்ளது ஆச்சரியாத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில்,
ஊசுட்டேரி ஒன்றும் சாதாரணமான இடம் அல்ல. இரு மாநிலங்களால் பறவை சரணாலயமாக அறிவித்து பாதுகாத்து வரும் நிலையில், எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரிப்பதில் வனத்துறைக்கு என்ன தயக்கம் எனத் தெரியவில்லை.
வனத்துறையில் போதிய டாக்டர்கள் இல்லாததால், வனவிலங்குகள் மற்றும் பறவைகள் எப்படி கொல்லப்பட்டன என்று இன்னும் இறுதி முடிவு வரவில்லை என்கின்றனர். ஆனால், அரசியல் அழுத்தம் காரணமாக இவ்விஷயத்தை மூடி மறைக்க முயல்வதாக தெரிகிறது.
அதனால், இவ்விவகாரம் குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் புகார் அளிக்க முடிவு செய்துள்ளோம். எனவே இப்பிரச்னையில் கவர்னர் மற்றும் தலைமை செயலர் நேரடியாக தலையிட வேண்டும் என்றனர்.

