ADDED : டிச 05, 2024 06:50 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்தார்.
முத்தியால்பேட்டை, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகநாதன் மகள், மோனிஷா, 23; கல்லுாரி முடித்து விட்டு, புதுச்சேரியில் உள்ள தனியார் பைனாஸ் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
உடல்நிலை சரியில்லை என, தனது பெற்றோரிடம் கூறிவிட்டு, நேற்று வீட்டில் இருந்தார். மாலையில் பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, அவரது தந்தை லோகநாதன் கொடுத்து புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, அவரை, தேடி வருகின்றனர்.
