ADDED : ஏப் 27, 2026 06:10 PM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: நோய் குணமாகத விரக்தி அடைந்த முதியவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீராம்பட்டினம் நாகூரார் தோட்டத்தை சேர்ந்தவர் வீரமுத்து (எ) பரமசிவம், 66; ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகததால், மனவிரக்தியில் இருந்தார்.
இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், நேற்று அவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
