தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்க நகராட்சிக்கு காங்., கோரிக்கை

 ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்க நகராட்சிக்கு காங்., கோரிக்கை

 ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்க நகராட்சிக்கு காங்., கோரிக்கை


ADDED : பிப் 14, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 04:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கொசுவை ஒழிக்க உள்ளாட்சி துறை இயக்குனருக்கு காங்., சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.

புதுச்சேரி காங்., தலைமை அலுவலக பொறுப்பாளர் பிரதிஷ் இருதயராஜ் உள்ளாட்சி துறை இயக்குனருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிறுப்பதாவது:

புதுச்சேரி முழுதும் கடந்த சில மாதங்களாக கொசு தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக மழைக்காலத்திற்குப் பிறகு தேங்கியுள்ள நீரால் அசுத்தம் மற்றும் சுகாதாரமின்மை காரணமாக டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா போன்ற கொசு மூலம் பரவும் நோய்கள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. கழிவுநீர் கால்வாய்கள், காலி இடங்கள் மற்றும் நீர் தேங்கும் இடங்களில் சிறப்பு நடவடிக்கை எடுக்கவும், உப்பனாறு கால்வாய், சின்ன வாய்க்கால் தெரு, செஞ்சி சாலை மற்றும் ஆம்பூர் சாலைக்கு இடையே உள்ள வாய்க்கால்களில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us