ADDED : அக் 02, 2024 02:06 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : தேர்வு செய்யப்பட்ட 30 பெண் போலீசார், கமாண்டோ பயிற்சிக்கு கோரிமேடு காவலர் பயிற்சி மைதானத்திற்கு நாளை வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி காவல்துறையில் ஏற்கனவே ஆண்கள் கமாண்டோ பிரிவு இருக்கிறது. மேலும், பெண்கள் கமண்டோ பிரிவு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்காக 30 பெண் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கமண்டோ பயிற்சி, சென்னையில் உள்ள கமாண்டோ பயிற்சி பள்ளியில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
அதற்காக நாளை 3ம் தேதி காலை 6:00 மணிக்கு கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி மைதானத்தில் தேர்வு செய்யப்பட்ட பெண் காவலர்கள் வரவேண்டும் என, டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து உத்தர பிறப்பிக்கப்பட்டுள்ளது.
