sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: 8,418 மாணவர்கள் எழுதினர்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: 8,418 மாணவர்கள் எழுதினர்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: 8,418 மாணவர்கள் எழுதினர்


ADDED : மார் 29, 2025 03:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2025 03:55 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் நேற்று நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 8,418 மாணவர்கள் எழுதினர்.

தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் இயங்கி வரும் தனியார் பள்ளிகளில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது.

புதுச்சேரி பகுதியில் 20 மற்றும் காரைக்கால் பகுதியில் 6 ஆகிய இடைநிலை மையங்களில் தேர்வு நடந்தது.

தேர்வு பணியில் மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், பறக்கும்படை அலுவலர்கள், நிலையான படை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் ஈடுபடுகின்றனர்.

புதுச்சேரி பகுதியில் நடந்த தேர்வில் 146 தனியார் பள்ளிகளை சேர்ந்த 7,271 மாணவர்கள், 362 தனித்தேர்வர்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் 28 தனியார் பள்ளிகளை சேர்ந்த 1183 மாணவர்கள், 167 தனித்தேர்வகள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது.

நேற்று நடந்த தமிழ் மற்றும் இதர மொழிப் பாட தேர்வில் புதுச்சேரியில் 7,246 மாணவர்கள் பங்கேற்றனர். 20 மாணவர்கள் ஆப்சென்டாகினர். 5 மாணவர்களுக்கு தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டது. இதேபோன்று, 346 தனித்தேர்வர்கள் பங்கேற்றனர்.

16 மாணவர்கள் ஆப்சென்டாகினர். காரைக்காலில் 1172 மாணவர்கள் பங்கேற்றனர். 3 மாணவர்கள் தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டது. 8 மாணவர்கள் ஆப்சென்டாகினர். இதேபோன்று, 158 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதினர். ஒருவருக்கு தேர்வு எழுத விலக்கு அளிக்கப்பட்டது. 8 பேர் ஆப்சென்டாகினர்.

தேர்வு துவங்கும் முன் மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, 10 நிமிடம் வினாக்களை படிக்கவும், 5 நிமிடங்கள் விடைத்தாளில் தங்களின் விவரங்களை பதிவு செய்து சரிபார்க்கவும் ஒதுக்கப்பட்டது. பின், காலை 10:15 மணிக்கு விடைகள் எழுத மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us