ADDED : நவ 11, 2025 06:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரியில் முக்கிய இடங்களில் நேற்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன.
அதன் ஒரு பகுதியாக ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் புதுச்சேரி ரயில் நிலையத்தில் சோதனையிட்டனர். வெளியூர்களில் இருந்து புதுச்சேரிக்கு வந்தவர்களின் பேக்கை ஆய்வு செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், பஸ் நிலையம், எல்லைப்பகுதிகள், சுற்றுலா இடங்கள், கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

