நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கணபதி செட்டிகுளத்தில் வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்த பைக் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கணபதிசெட்டிகுளம், மெயின் ரோட்டை சேர்ந்தவர் குபேரன், 42; விவசாயி. இவர், கடந்த 24ம் தேதி தனது பைக்கை (பி.ஒய் 05 எச் 5630) இரவு 10:00 மணிக்கு வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்தார்.
நள்ளிரவு 12:00 மணிக்கு பார்த்தபோது, பைக்கை காணவில்லை. அக்கம், பக்கத்தில் தேடியும் பைக் கிடைக்கவில்லை.
குபேரன் அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

