sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஏலச்சீட்டு மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

/

ஏலச்சீட்டு மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

ஏலச்சீட்டு மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

ஏலச்சீட்டு மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்


ADDED : செப் 25, 2025 03:52 AM

Google News

ADDED : செப் 25, 2025 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : நெல்லித்தோப்பை சேர்ந்த செல்வி, 60; என்பவரிடம் கடந்த 2023ல், நெல்லித்தோப்பு கஸ்துாரி பாய் நகரை சேர்ந்த பிளோமினா, 44; என்பவர், தீபாவளி சீட்டாக மாதம் ரூ. 1,000 வீதம் 12 மாதங்கள் ரூ.12 ஆயிரம் செலுத்தினால், அதனுடன் ரூ. 3 ஆயிரம் சேர்த்து தருவதாக ஆசை வார்த்தை கூறினார்.

அதைநம்பி, செல்வி தன்னுடன் 274 பேரை சீட்டில் சேர்த்து, ரூ. 2 லட்சத்து 74 ஆயிரம் வீதம் 12 மாதங்களுக்கு ரூ.32 லட்சத்து 88 ஆயிரம் பிளோமினாவிடம் கட்டினார். தீபாவளி முடிந்து, ஒரு நபருக்கு ரூ.15 ஆயிரம் வீதம் 274 பேருக்கு 41 லட்சத்து 10 ஆயிரம் வழங்காமல், திடீரென பிளோமினா மற்றும் அவரது கணவர் ஜான்பியர் தலைமறைவாகினர்.

இதுகுறித்து செல்வி உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், லாஸ்பேட்டையை சேர்ந்த சுந்தரமூர்த்தி, கடந்த 2024ல் பிளோமினா மற்றும் அவரது கணவர் ஜான்பியர் ஆகியோர் மீது அளித்த மோசடி புகாரின் பேரில், இருவரையும் முதலியார்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த இரண்டு வழக்கிலும் பல லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பதால், வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி டி.ஜி.பி., ஷாலினி சிங் உத்தரவிட்டார். அதன்படி, சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று முன்தினம் வழக்குப் பதிந்து விசாரணையை துவங்கினர்.






      Dinamalar
      Follow us