ADDED : ஜூலை 23, 2025 01:28 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி : நைனார்மண்டபம் முகாம்பிகை நகரில் முருகன் கோவில் கும்பாபி ேஷகம் முன்னிட்டு பந்தகால் நடும் பணியினை முனனாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் துவக்கி வைத்தார்.
முதலியார்பேட்டை தொகுதி நைனார்மண்டபம் மூகாம்பிகை நகரில், புதியதாக கட்டப்பட்டு வரும் புதுச்சேரி திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு, வரும் 28ம் தேதி கும்பாபி ேஷகம் நடக்கிறது. இதற்காக பந்தகால் நடும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு, கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
