ADDED : பிப் 18, 2025 06:37 AM

அ நிறம் | அளவு
திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் போலீஸ் சார்பில், அரசு உயர்நிலை பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன், போதை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.
சீனியர் கிரேடு சப் இன்ஸ்பெக்டர் லுார்துநாதன், போக்சோ சட்டம் மற்றும் பெண் குழந்தைகள், மகளிர் பாதுகாப்பு சட்டப் பிரிவுகள் குறித்து, விளக்கம் அளித்தார்.
முன்னாள் மாணவர் முகமது சித்திக் ஏற்பாட்டில், மாணவர்களுக்கு ஒரு மாதம் மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
