sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பச்சை கற்பூரத்தை சாப்பிட்ட 8 சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதி எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆறுதல்

/

பச்சை கற்பூரத்தை சாப்பிட்ட 8 சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதி எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆறுதல்

பச்சை கற்பூரத்தை சாப்பிட்ட 8 சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதி எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆறுதல்

பச்சை கற்பூரத்தை சாப்பிட்ட 8 சிறுமிகள் மருத்துவமனையில் அனுமதி எம்.எல்.ஏ., பார்வையிட்டு ஆறுதல்


ADDED : அக் 11, 2025 01:37 AM

Google News

ADDED : அக் 11, 2025 01:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே அன்னியூரில் சர்க்கரை என பச்சை கற்பூரத்தை சாப்பிட்ட, 8 பள்ளி சிறுமிகள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி அன்னியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், 4 ம் வகுப்பு படிக்கும் ஏழுமலை மகள் தனிஷ்கா, 9; கார்த்திக் மகள் ஷர்மிதா, 9; அய்யப்பன் என்பவரது மகள்கள் மதுமிதா, 9; பிரதிஷா,9; விஜயகுமார் மகள் நேத்ரா,9; சுரேஷ் மகள் கீர்த்திகா,9; நாகராஜ் மகள் சந்தியா,9; ஜெகன்நாதன் மகள் ரியாஸ்ரீ,9; ஆகிய 8 சிறுமிகளும், நேற்று மாலை பள்ளி வகுப்பில் இருக்கும் போது பச்சை கற்பூரத்தை (நாப்தலின் உருண்டை) இடித்து சர்க்கரை என நினைத்து சாப்பிட்டுள்ளனர்.

பள்ளி முடிந்து வீடு திரும்பிய பிறகு அனைவருக்கும் லேசான மயக்கம், வாந்தியால் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அனைவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் .

இது பற்றி தகவலறிந்த தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா மருத்துவமனைக்கு விரைந்து வந்து குழந்தைகளை பார்வையிட்டு பெற்றோருக்கு ஆறுதல் கூறி, டாக்டர்களின் உரிய சிகிச்சை அளிக்க கேட்டுக்கொண்டார்.






      Dinamalar
      Follow us