ADDED : ஏப் 20, 2026 06:28 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் காசு வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து, ரூ. 90 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி, காமராஜ் நகர், குமரன் நகரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சிலர் காசு வைத்து சூதாடுவதாக பெரியக்கடை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கிருந்த ஒரு அறையில் காசு வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், லாஸ்பேட்டை, முத்துமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த தியாகராஜன், 49; குமரகுருப்பள்ளம், மீரா சாஹிப் தெருவை சேர்ந்த சதானந்தம் (எ) சிவா, 26; அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த ரவிபிராசாத், 26; பாலமுருகன், 54; கோவிந்த சாலை, புதுநகரைச் சேர்ந்த வேல்முருகன், 23; வாணரப்பேட்டை, டாக்டர் ரோஜென் தெருவை சேர்ந்த புஷ்பராஜ், 37, ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, 6 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் மீது வழக்குப் பதிந்து, அவர்களிடம் இருந்த 90 ஆயிரத்து 420 ரூபாய், 5 மொபைல் போன்கள் மற்றும் சீட்டு கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
