ADDED : ஏப் 09, 2024 04:49 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: நெட்டப்பாக்கத்தில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவினை வலியுறுத்தி தப்பாட்டம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கெடுத்தல் திட்டத்தின் கீழ்,புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் சார்பில் கடந்த எம்.எல்.ஏ., தேர்தலில் குறைந்த அளவு ஓட்டுப்பதிவு நடந்த இடங்களில், 100 சதவீத ஓட்டுப்பதிவினை வலியுறுத்தி, வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி, நேற்று மாலை நெட்டப்பாக்கம்சந்திப்பில் வாக்காளர் விழிப்புணர்வு தப்பாட்டம் நிகழ்ச்சி நடந்தது.
ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் வாக்காளர் விழிப்புணர்வு பிரிவு செய்திருந்தனர்.
