தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பள்ளிகளில் காய்கறி சத்துணவு தோட்டம்

பள்ளிகளில் காய்கறி சத்துணவு தோட்டம்

பள்ளிகளில் காய்கறி சத்துணவு தோட்டம்


ADDED : ஆக 03, 2024 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2024 04:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் உரையில்,

'பொதுமக்கள் காய்கறி சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு என் வீடு என் நிலம் என்ற திட்டத்தினை காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப உதவியுடன் சோதனை முயற்சியில் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பொதுமக்கள் வீட்டு மாடியில் காய்கறி தோட்டம் அமைக்க 5 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தோட்டக்கலை இடு பொருட்கள் வழங்கப்படும். ஆடி பட்டம் முதல் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்' என்றார்.

இதேபோல் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் பங்களிப்புடன் காய்கறி மற்றும் சத்துணவு தோட்டம் அமைத்திட, ஒரு சதுர அடிக்கு 2.50 ரூபாய் என்ற அளவில் அதிகபட்சமாக 4 ஆயிரம் சதுர அடி வரை அல்லது பள்ளி ஒன்றிக்கு 10 ஆயிரம் என்ற அளவில் ஊக்கத் தொகை வழங்குவதற்கான புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us