ADDED : ஆக 23, 2024 06:29 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: சென்டாக் மூலம் நர்சிங், பொறியியல் கலந்தாய்வினை விரைவாக நடத்த புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் தலைவர் நாராயணசாமி கவர்னர், முதல்வருக்கு அவர் அளித்துள்ள மனு;
நர்சிங் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் மற்றும் சீட் மேட்ரிக்ஸ் உடனடியாக வெளியிட்டு, நர்சிங் முதல் கட்ட கலந்தாய்வையும், பொறியியல் படிப்புக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வையும் உடனடியாக நடத்தி முடிக்க வேண்டும்.
நர்சிங் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு ஒரு மாதத் திற்கு மேலாகியும், கலந்தாய்வு காலதாமதம் ஏற்படுவது பல்வேறு சந்தேகங்களையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காரணங்களை தெளிவுபடுத்தி விரைவில் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
