/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள்
/
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள்
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள்
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள்
ADDED : ஏப் 24, 2024 07:22 AM

உளுந்துார்பேட்டை, : கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் திருநங்கைகள் தாலி கட்டிக் கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் சித்திரைத் திருவிழா கடந்த 9ம் தேதி சாகை வார்த்தலுடன் துவங்கியது. தொடர்ந்து பல்வேறு வழிபாடுகள் நடந்து வந்தன.
நேற்று (23ம் தேதி) இரவு சுவாமி திருக்கண் திறக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் மற்றும் ஏராளமான திருநங்கைகள் புத்தாடை அணிந்து பூசாரிகளின் கையால் தாலிக் கட்டிக்கொண்டு இரவு முழுதும் ஆடிப்பாடி மகிழுந்தனர்.
விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த வந்த ஏராளமான திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் குவிந்திருந்தனர். எஸ்.பி., சமய்சிங்மீனா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இன்று 24ம் தேதி காலை 6:30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. மாலை பந்தலடி பாரதம் படைத்தல், இரவு காளி கோவிலில் உயிர் பெறுதல், 25ம் தேதி விடையாற்றி உற்சவம், 26ம் தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

