ADDED : ஆக 02, 2024 01:31 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்,: வில்லியனுார் அடுத்த கோர்க்காடு கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோவில் 76ம் ஆண்டு செடல் மற்றும் திருத்தேர் உற்சவம் கடந்த 27ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
அன்று முதல் தினமும் சுவாமிக்கு காலை அபி ேஷக ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.
இன்று பகல் 12 மணிக்கு திருத்தேர் உற்சவமும், தொடர்ந்து செடல் உற்சவம் நடக்கிறது. நாளை மஞ்சள் நீர் உற்சவமும், 4ம் தேதி ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
