/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
படியில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு
/
படியில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு
ADDED : ஏப் 22, 2024 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வீட்டு படியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
வம்பாகீரப்பாளைம் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 53; கூலி தொழிலாளி. இவர் அதிகமாக மது குடித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கீழே இறங்கும் போது படியில் இருந்து வழுக்கி விழுந்து படு காயமடைந்தார்.
அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

