sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுப்ரமணியபாரதி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதனை

சுப்ரமணியபாரதி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதனை

சுப்ரமணியபாரதி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதனை


ADDED : மே 08, 2024 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2024 01:38 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார்: திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாநில அளவில் ஐந்தாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இது குறித்து பள்ளியின் முதல்வர் சம்பத், துணை முதல்வர் சுசிலா சம்பத் ஆகியோர் கூறியதாவது:

சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளி 2023- - 24ம் கல்வியாண்டில் அதிகப்படியான மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். அதில் மாணவி விக்னேஸ்வரி 600 க்கு 590 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் ஐந்தாம் இடமும், பள்ளி அளவில் முதலிடமும் பிடித்தார். மாணவி பிரியங்கா தேவி 587 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், சமீரா பர்வீன் 583 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

பள்ளி அளவில் 550 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 52 மாணவர்களும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 54 மாணவர்களும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 31 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

தமிழ் பாடத்தில் 7 பேர் 99 ,கணித பாடத்தில் 2 பேரும். உயிரியல் பாடத்தில் இருவர் 95 மதிப்பெண்ணும், கணினி அறிவியல் பாடத்தில் 10 பேர் 100 மதிப்பெண்களும் பெற்றனர். வணிகவியல் பாடத்தில் 2 பேர் தலா 100 மதிப்பெண்கள், பெற்றுள்ளனர்.

கல்விப் பணியில் 35 ஆண்டுகள் அனுபவமிக்க நமது பள்ளி புதுச்சேரி மாநில அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்து வருகிறது.

நகர்புற பள்ளிகளுக்கு இணையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை சி.பி.எஸ்.சி.இ., (NCERT) பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது.

தொடர்ந்து நமது பள்ளியின் வெற்றிக்கு ஒத்துழைப்பு நல்கி வரும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.''

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us