sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெரியார் நகர் வாலிபர் கொலை வழக்கு மூன்று பேரிடம் விசாரணை

பெரியார் நகர் வாலிபர் கொலை வழக்கு மூன்று பேரிடம் விசாரணை

பெரியார் நகர் வாலிபர் கொலை வழக்கு மூன்று பேரிடம் விசாரணை


ADDED : ஏப் 25, 2024 03:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2024 03:31 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பெரியார் நகரில் வாலிபர் வெட்டி கொலை செய்த வழக்கில் மேலும் மூவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி பெரியார் நகர் 10வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ருத்ரேஷ், 27; பெயிண்டர். இவர் மீது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர் தரப்பிற்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 11:30 மணிக்கு, பெரியார் நகர், கங்கைமுத்து மாரியம்மன் கோவில் முன்பு நின்றிருந்த ருத்ரேஷ்சை 6 பேர் கொண்ட கும்பல் சராமாரி வெட்டி கொலை செய்தது.

அங்கிருந்து தப்பிச் சென்ற கும்பலில் கவுதம், 24; ஈஸ்வர், 20; ஆனந்த், 23; ஆகிய மூவரை வில்லியனுார் போலீசார் கைது செய்து உருளையன்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கொலைக்கு பயன்படுத்திய 2 கத்திகள், பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த எழில், பரத், சதிஷ் ஆகிய மூவரை உருளையன்பேட்டை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us