ADDED : மே 14, 2026 06:53 PM
புதுச்சேரி: ஜிப்மரில் நர்சிங் மற்றும் துணை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கான 12வது பட்டமளிப்பு விழா நடந்தது.
ஜிப்மரில் நர்சிங் மற்றும் துணை மருத்துவ அறிவியல் படிப்புகளான எம்.எஸ்.சி., நர்சிங், எம்.எஸ்.சி., (ஏ.எச்.எஸ்), எம்.பி.எச், பி.எஸ்.சி., நர்சிங் மற்றும் பி.எஸ்.சி., (ஏ.எச்.எஸ்) ஆகியவற்றுக்கான 12-வது பட்டமளிப்பு விழா, நேற்று காலை ஜிப்மர் அப்துல் கலாம் அரங்கத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில், மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலரான புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா தலைமை தாங்கினார். புதுச்சேரி அரசின் தலைமைச் செயலாளரர் சரத் சவுகான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகி, மருத்துவக் கல்வி, நோயாளி சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்தார். பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 320 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டது. துறைசார்ந்த பாடங்களில் சிறந்து விளங்கி மற்றும் அதிக மதிப்பெண்களைப் பெற்ற 24 மாணவர்களுக்குப் தங்கப் பதக்கங்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜிப்மர் நிர்வாகம் செய்திருந்தது.
