ADDED : மார் 30, 2024 06:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : மணலிப்பட்டில் வீட்டில் இருந்து வெளியே சென்ற கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
திருக்கனுார் அடுத்த மணலிப்பட்டு கிழக்குதெருவை சேர்ந்தவர் சக்திவேல், 45; கூலி தொழிலாளி. இவர் கடந்த 28 ம் தேதி காலை 3:00 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் சக்திவேல் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ஜெயந்தி அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து சக்திவேலை தேடி வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் 0413-2688435 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

