ADDED : ஏப் 14, 2024 05:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் அமைதியான முறையில் நடத்த தேர்தல் துறை போலீசாருடன் இணைந்து பணியாற்றி வருகிறது. மொத்தமுள்ள 967 ஓட்டுச்சாவடிகளில், 237 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது.
பதற்றமான ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள இடங்களில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட வாணரப்பேட்டை, கண்டாக்டர்தோட்டம், புஸ்சி வீதி, வம்பாக்கீரப்பாளையம், சுப்பையா சாலை உள்ளிட்ட பகுதிகளில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் தமிழக சிறப்பு காவல் பிரிவு போலீசாருடன் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

