/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அதிகமாக மது குடித்த நாடக ஆசிரியர் சாவு
/
அதிகமாக மது குடித்த நாடக ஆசிரியர் சாவு
ADDED : ஆக 12, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அதிகமாக மது குடித்த நாடக ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.
வானுார் அடுத்த காட்ராம்பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை, 54; நாடக ஆசிரியர். குடிப்பழக்கம் உள்ள இவர் நேற்று முன்தினம் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் ஏழுமலை நேற்று மாலை 5:00 மணியளவில் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு சேதாரப்பட்டு பெட்ரோல் பங்க் பின்புறம் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மகன் கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில், சேதாரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

