/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'மாஜி' அமைச்சர் மீதான அவதுாறு வழக்கு ஒத்திவைப்பு
/
'மாஜி' அமைச்சர் மீதான அவதுாறு வழக்கு ஒத்திவைப்பு
ADDED : ஏப் 03, 2024 07:23 AM
விழுப்புரம், : முன்னாள் அமைச்சர் சண்முகம் மீதான அவதுாறு வழக்குகளின் விசாரணை 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விழுப்புரம், ஆரோவில் மற்றும் கோட்டக்குப்பத்தில் கடந்தாண்டு நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டங்களில் பேசிய, முன்னாள் அமைச்சர் சண்முகம் தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் அவதுாறாக பேசினார்.
இதுதொடர்பாக அவர் மீது அரசு வழக்கறிஞர் சுப்ரமணியம் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சண்முகம் சார்பில் வழக்கறிஞர்கள் ராதிகா, தமிழரசன் ஆகியோர் ஆஜராகி, ஆரோவில், கோட்டக்குப்பம் வழக்குகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டும், விழுப்புரம் வழக்கை விசாரிக்க சென்னை ஐகோர்ட்டும், இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறி மனு தாக்கல் செய்தனர்.
மனுவை ஏற்ற நீதிபதி பூர்ணிமா, வழக்குகளின் விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

