sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின்னல் தாக்கி, தென்னை மரம் எரிந்து சேதம்

மின்னல் தாக்கி, தென்னை மரம் எரிந்து சேதம்

மின்னல் தாக்கி, தென்னை மரம் எரிந்து சேதம்


ADDED : ஜூலை 13, 2024 05:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2024 05:56 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார்: திருக்கனுார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் நேற்றிரவு 7:00 மணி அளவில் சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. சூறைக்காற்று காரணமாக வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன.

இதற்கிடையே திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு இருளர் குடியிருப்பு அருகே சாலையோரம் வளர்ந்திருந்த தென்னை மரம் ஒன்றின் மீது பலத்த சத்ததுடன் மின்னல் தாக்கியது. இதில், தென்னை மரத்தின் மேல் பகுதி தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

மேலும், குடியிருப்பு அருகே ஏற்பட்ட பலத்த சத்தம் காரணமாக அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பாகூர்


பாகூர் மற்றும் அதன் சுற்று வாட்டார பகுதியில் நேற்று இரவு 8:00 மணி முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக மின்சாரம் தடை பட்டது. இருப்பினும் சிறிது நேரத்தில் மீண்டும் மின்சாரம் வந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us