ADDED : செப் 06, 2024 04:17 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : புதுச்சேரி - மாகி செல்லும் பி.ஆர்.டி.சி., பஸ் கண்டக்டரிம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரியில் இருந்து நேற்று இரவு 10:45 மணிக்கு பி.ஆர்.டி.சி., பஸ் மாகிக்கு புறப்பட்டது. பஸ்சில் சீட்டுகள் நிரம்பிய நிலையில் மேற்கொண்டு பயணிகளை கண்டக்டர் ஏற்றினார். இவர்கள் அனைவரும் பஸ் படி மற்றும் தரையில் அமர்ந்தனர்.
இதனை கண்ட சக பயணிகள் ஏன் அதிக சீட்டுகளை ஏற்றுகிறீர்கள் என கண்டக்டரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
