sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

27ல் டி.ஆர்.பி., தேர்வு ஆலோசனை கூட்டம்

/

27ல் டி.ஆர்.பி., தேர்வு ஆலோசனை கூட்டம்

27ல் டி.ஆர்.பி., தேர்வு ஆலோசனை கூட்டம்

27ல் டி.ஆர்.பி., தேர்வு ஆலோசனை கூட்டம்


UPDATED : டிச 25, 2025 10:22 AM

ADDED : டிச 25, 2025 10:36 AM

Google News

UPDATED : டிச 25, 2025 10:22 AM ADDED : டிச 25, 2025 10:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்தும், தமிழக அரசு கலை அறிவியல் கல்லுாரி மற்றும் அரசு பி.எட்., கல்லுாரிகளுக்கான உதவி பேராசிரியர் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:


நாமக்கல் மாவட்டத்தில், தமிழக அரசு கலை அறிவியல் கல்லுாரி மற்றும் அரசு பி.எட்., கல்லுா-ரிகளுக்கான உதவி பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு, வரும், 27ல், நடக்கிறது. மாவட்டத்தில், 5 தேர்வு மையங்களில், 1,110 தேர்வர்கள் பங்கேற்கின்றனர். அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள், தேர்வு நாளன்று காலை, 8:30 முதல், 9:00 மணி வரை மட்டுமே மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். மதியம் 2:00 முதல், 2:30 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்வர்கள், குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று, தேர்வுகளில் கலந்துகொள்ள வேண்டும். கருப்பு நிற பால்பாயின்ட் பேனாவை பயன்படுத்தி மட்டும் தேர்வெழுதவும், தேர்வுக்கான ஹால் டிக்கெட் மற்றும் அதில் குறிப்பிட்டுள்ள அசல் அடையாள அட்டை ஒன்றை தேர்வு நாளன்று கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எழிலரசி, மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us